search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒகேனக்கல் நீர்வரத்து குறைவு"

    ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்த நீர்வத்து இன்று 12,200 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
    தருமபுரி:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டரம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    நேற்று காலை 6,400 கன அடியாக இருந்த நீர்வரத்து மழையின் காரணமாக படிபடியாக அதிகரித்து நேற்று மாலை 14 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 12 ஆயிரத்து 200 கனஅடியாக குறைந்தது.

    நேற்று மதியம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் திடீரென்று ஒகேனக்கல்லுக்கு வந்து ஆய்வு செய்தனர். 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்தபோது மெயின் அருவி, காவிரி கரையோர பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்தது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் ஒகேனக்கல் பகுதிகளில் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மழை காலங்களிலும், நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆலோசனை நடத்தினர். #Hogenakkal

    கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. ஒகேனக்கலுக்கு நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது.
    ஒகேனக்கல்:

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இன்று 4 ஆயிரத்து 570 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கபினி அணையில்இருந்து இன்று 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதமும் நேற்று 70 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்தது. தற்போது 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.

    நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்பு கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ×